ஆண்களுக்கு சுகாதார வளாகம்

Update: 2024-09-01 18:05 GMT

தாரமங்கலம் நகராட்சி 23-வது வார்டில் ஆறுபடை நகர், சண்முகா நகர், மகாத்மா காந்தி வீதி, முதியோர் இல்லம் லைன்தெரு, தங்கசாலை வீதி ஆகிய பகுதிகள் உள்ளன. இங்கு ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். அந்த பகுதியில் உள்ள சில வீடுகளில் கழிவறை வசதி இல்லை. இதனால் அவர்கள் இயற்கை உபாதைக்காக வெளியே செல்ல சிரமப்படுகிறார்கள். கழிவறை இல்லாததால் முதியவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகிறார்கள். ஆண்களுக்கு என்று இந்த பகுதியில் தனியாக சுகாதார வளாகம் இல்லை. மேலும் அங்கு சுகாதார வளாகம் அமைக்க வேண்டும் என மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே இந்த பகுதி வாசிகளின் முக்கிய கோரிக்கையான சுகாதார வளாகம் கட்டித்தர அதிகாரிகள் முன்வருவார்களா?

-குமார், சேலம்.

மேலும் செய்திகள்