பொதுமக்கள் அச்சம்

Update: 2024-09-01 13:14 GMT

ராமநாதபுரம் வலம்புரி நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள தெருக்களில் தெருவிளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சமடைகின்றனர். மேலும் இருட்டை பயன்படுத்தி திருட்டு சம்பவங்களும் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் நலன்கருதி இப்பகுதியில் தெருவிளக்கு அமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்