பொதுமக்கள் அச்சம்

Update: 2024-08-25 15:22 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சாலைகளில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன. இவை அச்சுறுத்தும் வகையில் திரிவதால் குழந்தைகள், பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். எனவே பொதுமக்களை அச்சுறுத்தும் இந்த தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்