கருவேலமரங்கள் வெட்டப்படுமா?

Update: 2024-08-04 12:42 GMT

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பிள்ளைபெருமாள்நல்லூர் ஊராட்சியில் வடக்கு தெரு,தெற்கு தெரு,மேட்டுத்தெரு உள்ளது. இப்பகுதியில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்காக 3 கிலோ மீட்டர் தொலைவில் சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாடு முறையான பராமரிப்பின்றி கிடக்கிறது. சுடுகாடு பகுதி முழுவதிலும் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்திருக்கின்றன. இதன்காரணமாக இறுதிச்சடங்கு செய்ய வருபவர்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுடுகாட்டில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்