பாசன வாய்க்கால் தூர்வாரப்படுமா?

Update: 2024-07-28 11:46 GMT

மருதூர் தடுப்பணையின் கீழக்கால் மூலம் பாசன வசதி பெறும் ஸ்ரீவைகுண்டம் கஸ்பாகுளத்தின் 9-வது மடை பாசன வாய்க்கால் கடந்த டிசம்பர் மாத வெள்ளத்தில் சேதமடைந்து தூர்ந்து விட்டது. இந்த வாய்க்காலை தூர்வாரினால்தான் கடைமடையான பராக்கிராமபாண்டி கிராம விவசாயிகள் விவசாயம் செய்ய முடியும். எனவே ஸ்ரீவைகுண்டம் கஸ்பாகுளம் 9-வது மடை பாசன வாய்க்காலை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்