பொதுமக்கள் கோரிக்கை

Update: 2024-07-21 11:23 GMT

காஞ்சீபுரம் மாவட்டம், நீர்வள்ளுர் கிராமம் பகுதியில் குட்டை ஒன்று உள்ளது. அந்த குட்டை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் மழை காலங்களில் மழைநீர் குட்டைக்கு வடிந்து செல்லாமல் தெருக்களில் தேங்கி கிடக்கிறது. இதனால் அதிக அளவு துர்நாற்றம் வீசுகிறது. அப்பகுதி மக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குட்டை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்