காய்ந்த மரக்கிளைகள்

Update: 2024-07-21 10:43 GMT

கோைவ ரத்தினசபாபதி புரம் திவான்பகதூர் சாலை கென்னடி பஸ் நிறுத்தம் அருகில் சாலையோரத்தில் ராட்சத மரங்கள் நிற்கின்றன. இந்த மரங்களில் காய்ந்த மரக்கிளைகளும் உள்ளன. அவை எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. சூறாவளி காற்று வீசும்போது அவை முறிந்து விழுந்தால் அந்த வழியாக செல்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே அங்குள்ள மரங்களில் இருக்கும் காய்ந்த கிளைகளை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக முன்வர வேண்டும்.


மேலும் செய்திகள்