தெருநாய்கள் தொல்லை

Update: 2024-07-21 10:33 GMT

கூடலூர் அக்ரஹாரம் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. அவை கூட்டம், கூட்டமாக சாலைகளில் சுற்றித்திரிகின்றன. அப்போது அந்த வழியாக நடந்து வரும் பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகனங்களில் வருவோரை துரத்தி சென்று கடிக்க முயல்கின்றன. இதனால் அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக சாலைகளில் அச்சத்துடனேயே செல்ல வேண்டி உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்