நிழற்குடை அமைக்கப்படுமா?

Update: 2024-07-21 10:23 GMT

கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதன் காரணமாக அங்கு மழை மற்றும் வெயில் காலங்களில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் கடும் அவதிப்படுகிறார்கள். சிலர் கையில் குழந்தையுடன் நீண்ட நேரம் காத்திருந்து அவதிப்படுவதை காண முடிகிறது. மேலும் வயதானவர்களும் கடும் சிரமங்களை சந்திக்கின்றனர். எனவே கூடலூர் நகராட்சி நிர்வாகத்தினர் அங்கு பயணிகள் பஸ்சில் ஏறும் மற்றும் இறங்கும் இடங்களில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்