அடிப்படை வசதிகள் கிடைக்குமா?

Update: 2024-07-14 11:59 GMT

காஞ்சீபுரம் மாவட்டம், குன்றத்தூர் மாணிக்கம் நகரை சுற்றியுள்ள சுமார் 10-க்கும் மேற்பட்ட தெருகளில் தெருவிளக்கு எரியவில்லை. மேலும், குடிநீர் இணைப்பு மற்றும் சாலை வசதி போன்ற அடிப்படை வசதி இல்லை. இதனால் அடிப்படை வசதிகள் இன்றி அந்த பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்