ஏ.டி.எம். எந்திரம் வேண்டும்

Update: 2024-07-14 11:35 GMT

திருவள்ளூர் மாவட்டம், திருமழிசையில் பாரத ஸ்டேட் வங்கியின் கிளை உள்ளது. இந்த வங்கியில் ஏ.டி.எம். எந்திரம் மற்றும் பணம் செலுத்தும் எந்திரங்கள் இல்லாததால் வாடிக்கையாளர்கள் அவதியடைகின்றனர். மேலும் அருகில் வேறு வங்கி ஏ.டி.எம். எந்திரங்கள் இல்லாததால் வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம். எந்திரங்களை தேடி அலைந்து திரியும் நிலை உள்ளது. எனவே வங்கியில் ஏ.டி.எம். எந்திரம் அமைக்க வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


மேலும் செய்திகள்