நாய்கள் தொல்லை

Update: 2024-07-14 10:19 GMT

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஒன்றியம் துவரங்குறிச்சி ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிகளுக்கு அருகே நாய்கள் அதிகளவில் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இவை பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகளை அச்சுறுத்தும் வகையில் உலா வருகின்றன. சில சமயங்களில் மாணவர்களை விரட்டி சென்று கடிக்கின்றன. இதன்காரணமாக மாணவ-மாணவிகள் அச்சத்துடன் பள்ளிக்கு சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்


மேலும் செய்திகள்