காத்திருப்பு அறை கட்டப்படுமா?

Update: 2024-07-14 09:55 GMT

பல்லடத்தில் செயல்படும் கிளைச்சிறை ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. இங்கு 40 கைதிகள் வரை அடைக்கலாம். இந்த சிறைச்சாலை பல வருடங்களாக செயல்படாமல் இருந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு பராமரிக்கப்பட்டு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. இங்கு விசாரணை கைதிகளை சந்திப்பதற்காக வரும் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிறை அதிகாரிகளிடமிருந்து அனுமதி வரும் வரை சிறைச்சாலைக்கு வெளியே ரோட்டில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே காத்திருப்பு அறை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


மேலும் செய்திகள்