இடிந்து விழுந்த நடைபயிற்சி பாதை

Update: 2024-06-30 13:52 GMT

பெரம்பலூர்- துறையூர் சாலையில் உள்ள பழைய நகராட்சி அலுவலகத்தின் பின்புறம் தெப்பக்குளம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தெப்பக்குளத்தை சுற்றி பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொள்ளும் வகையில் நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக இந்த தெப்பக்குளத்தின் ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த நடைபாதையின் ஒரு பகுதி சுற்றுச்சுவற்றுடன் இடிந்து தெப்பக்குளத்தில் விழுந்தது. இதனால் இப்பகுதி மக்கள் இப்பகுதியில் நடைபயிற்சி மேற்கொள்ள முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்