அடிப்படை வசதி இல்லாத மயானம்

Update: 2024-06-30 11:59 GMT

தஞ்சை மாவட்டம் பூதலூர் வட்டம் செல்லப்பன்பேட்டை ஊராட்சியில் செல்லப்பன்பேட்டை-வைரப்பெருமாள்பட்டி சாலையில் மயானம் உள்ளது. இந்த மயானத்துக்கு சாலை வசதி, தண்ணீர் வசதி இல்லை. இதனால் இறந்தவர்களின் உடலை இறுதி சடங்குகள் செய்வதற்காக கொண்டுவருபவர்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். அடிப்படை வசதி இல்லாத மயானத்தால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் இறுதிச்சடங்குகள் செய்வதில் சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள மயானத்துக்கு சாலை மற்றும் தண்ணீர் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்