குரங்குகள் தொல்லை

Update: 2024-06-30 11:58 GMT

தஞ்சை மாவட்டம் பூதலூர் பகுதி காளியம்மன் கோவில் தெருவில் குரங்குகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை அப்பகுதியில் உள்ள மரங்களில் ஏறி பழங்களை பறித்து வீசி செல்கின்றன. வீடுகளுக்குள் புகுந்து உணவுப்பொருட்கள் செல்போன் போன்றவற்றை எடுத்து செல்கின்றன. சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களை கடிக்க பாய்கின்றன. கூட்டமாக சாலையில் அங்கும்,இங்கும் ஓடுவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள், வாகன ஓட்டிகளின் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் கூண்டுகள் வைத்து குரங்குகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்