தூர்வாரப்படாத ஏரி

Update: 2024-06-30 11:36 GMT

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம், விக்கிரமங்கலத்தில் உள்ள இரட்டை குளம் ஏரியை நம்பி 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நடவு விவசாயம் ஒவ்வொரு ஆண்டும் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த ஏரியானது தற்போது தூர்ந்துபோன நிலையில் உள்ளதால் மழைபெய்யும்போது மழைநீரை முழுமையாக சேகரிக்க முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வெயில் காலங்களில் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைவதினால் விவசாயிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த ஏரியை தூர்வார வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்