பன்றிகள் தொல்லை

Update: 2024-06-30 10:53 GMT

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் திருக்கடையூர் ஊராட்சி அபிஷேககட்டளையில் பன்றிகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை சாக்கடை கழிவுநீரில் புரண்டு எழுந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடுகின்றன. அப்பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குள் சென்று பயிர்களை சேதம் செய்கின்றன. சாலையில் கூட்டமாக அங்கும்,இங்கும் சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பன்றிகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்