போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்

Update: 2024-06-30 09:51 GMT

பல்லடம் என்.ஜி.ஆர் ரோடு கடைவீதியில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தி விட்டுச் செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கடைகளுக்கு வரும் சரக்கு வாகனங்களும் அவைகளுக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர்த்து, நினைத்த நேரத்தில் வாகனங்களை கொண்டு வந்து நிறுத்தி, சரக்குகளை இறக்குகின்றனர். இதனாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே ஒதுக்கப்பட்ட நேரத்தில், சரக்குகளை கையாளவும் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்