"தினத்தந்தி" புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2024-06-23 11:37 GMT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், மருவத்தூர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேரமும் செயல்படாததால் நோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர் என "தினத்தந்தி" புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஆரம்ப சுகாதார நிலையத்தை 24 மணி நேரமும் செயல்பட நடவடிக்கை எடுத்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட "தினத்தந்தி" புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்