அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் தவிப்பு

Update: 2024-06-16 11:31 GMT

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், திருவரங்குளம் ஒன்றியம், திருக்கட்டளை ஊராட்சிக்கு உட்பட்ட ஏ.வி.எம். நகர் பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர், திடக்கழிவு மேலாண்மை, கழிவுநீர் குழாய்கள்,தெரு விளக்குகள் என எந்த வசதியும் செய்யப்படாமல் உள்ளது. மேலும் இப்பகுதியில் குறைந்த மின்னழுத்த குறைபாடு காரணமாக வீட்டில் உள்ள மின்சாதன பொருட்களை இயக்குவதில் பெரிதும் சிரமமாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்