"தினத்தந்தி" புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2024-06-16 11:30 GMT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், மங்களமேடு அருகே உள்ள அகரம்சீகூர் ஏரியில் இருந்து வயலூர் ஏரி வரை செல்லும் பாசன வாய்க்கால் தூர்வாரப்படாமல் தூர்ந்துபோன நிலையில் காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர் என "தினத்தந்தி" புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து வாய்க்காலை தூர்வாரும் பணியை தொடங்கினர். இதற்கு செய்தி வெளியிட்ட "தினத்தந்தி" புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்