வாய்க்காலை தூர்வார வேண்டும்

Update: 2024-06-16 09:38 GMT
ஆத்தூர் அருகே பழையகாயல் 3-வது வார்டு பகுதி வழியாக செல்லும் வாய்க்காலில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளது. மேலும் அங்கு குப்பைகளும் நிறைந்து கிடப்பதால் பாசன குளங்களுக்கு தண்ணீர் செல்வதில் இடையூறு ஏற்படுகிறது. மழைக்காலங்களில் வாய்க்காலில் தண்ணீர் வடிந்து செல்லாமல் குடியிடிருப்புகளுக்குள் புகும் அபாயம் உள்ளது. எனவே வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்