பயன்பாட்டிற்கு வராத சமுதாயக்கூடம்

Update: 2024-06-09 12:56 GMT

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியம் கிழுமத்தூர் ஊராட்சியைச் சேர்ந்த கிழுமத்தூர் குடிக்காடு பகுதியில் கடந்த 2012-ம் ஆண்டு ரூ.15 லட்சம் செலவில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. ஆனால் இந்த சமுதாயக்கூடம் இதுவரை திறக்கப்படாமல் பயன்பாட்டிற்கு வரவில்லை. எனவே சம்பந்தப்பட்ட நிர்வாக அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு சமுதாயக்கூடத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்