அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் தவிப்பு

Update: 2024-06-09 11:43 GMT

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அருகே உள்ள திருக்கட்டாலில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பொதுமக்களின் அடிப்படை தேவையான சாலை, வடிகால், குப்பைகளை அகற்றும் வசதி, தெரு விளக்குகள் உள்ளிட்ட வசதிகள் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இப்பகுதியில் அடிக்கடி குறைந்த அழுத்த மின்சாரம் வினியோகம் செய்யப்படுவதால் மின்சாதன பொருட்கள் பழுதாகி வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்