தெரு நாய்கள் தொல்லை

Update: 2024-06-02 13:57 GMT

திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம், அகத்தியர் நகர், குமாரசாமி நகர், ராம கிருஷ்ணாபுரம், ஆகிய பகுதிகளில் நாய்கள் மிகவும் அதிகமாக உள்ளது. மேலும் குழந்தைகள், பொதுமக்கள் அந்த வழியாக செல்லும் போது அவர்களை கடிக்க துரத்துகிறது. இருசக்கர வாகனத்தில் செல்பவர்களையும் கடிக்க துரத்துவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் அந்த பகுதி வழியாக செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தெரு நாய்களை பிடித்து செல்ல உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்