சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்

Update: 2024-06-02 13:33 GMT

நாகை மாவட்டம் ஆதலையூர் பஞ்சாயத்து பகுதியில் கால்நடைகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை இரவு நேரங்களில் சாலை நடுவே படுத்துக்கொள்கின்றன. இதனால் வாகனங்களில் வருபவர்கள் கால்நடைகள் மீது மோதி விபத்துக்குள்ளாகின்றனர். சாலையில் நடந்து செல்பவர்களையும் சில நேரங்களில் கால்நடைகள் முட்ட செல்கின்றன. இதன்காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சாலையில் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்