மயான கொட்டகை வேண்டும்

Update: 2024-06-02 13:14 GMT

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், கீழநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட மழவராயநல்லூர் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உயிரிழப்பவர்களின் உடல்களை தகனம் செய்ய மயான கொட்டகை இல்லாமல் திறந்த வெளியில் உடல்களை எரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வெயில் மற்றும் மழை காலங்களில் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்