வளைந்து நிற்கும் மின்கம்பம்

Update: 2024-05-26 10:24 GMT


பல்லடம் -மங்கலம் ரோட்டில் மின் கம்பம் ஒன்று நீண்ட நாட்களாக சாய்ந்த நிலையில் உள்ளது. எந்த நேரமும் உடைந்து விழும் நிலையில் உள்ள இந்த மின்கம்பத்தை மாற்றக் கோரி மின்வாரியத்திற்கு பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. தற்போது கோடை மழையுடன் பலத்த காற்று வீசுகிறது. அபாய நிலையில் உள்ள மின் கம்பம் உடைந்து விபத்து ஏற்படும் முன் மின் கம்பத்தை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்