நாய்கள் தொல்லை

Update: 2024-05-19 11:04 GMT

தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை சிகிச்சைக்காக வருபவர்களை துரத்தி செல்கின்றன. இதனால் சிகிச்சைக்காக வருபவர்கள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். மேலும், சில நேரங்களில் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெறுபவர்கள் வைத்திருக்கும் உடைமைகளை தூக்கி செல்கின்றன. இதனால் சிகிச்சைக்கு வருபவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மருத்துக்கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்

மயான வசதி