பெயர் பலகையில் பெயர் எங்கே?

Update: 2024-05-05 14:51 GMT

செங்கல்பட்டு மாவட்டம், பழைய பெருங்களத்தூரில் உள்ள குறிஞ்சிநகர் 3-வது பிரதான சாலை முதல் குறுக்குத் தெருவில் பெயர் எழுதப்படாமல் உள்ளது. இதேபோன்று பெருங்களத்தூரில் கலைஞர் சாலையின் 5-வது தெரு டாக்டர் அம்பேத்கர் தெரு ஆகும். இந்த தெருவிலும் தெருவின் பெயர் குறிப்பிடப்படாமல் வெறும் பலகை மட்டும் உள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பெயர் பலகை சரிசெய்ய தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்