கழிவறை பயன்பாட்டிற்கு வருமா?

Update: 2024-05-05 14:48 GMT

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் பேருந்து நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ஆனால், அங்கு இருக்கும் கழிவறையானது பொது மக்களின் பயன்பாட்டில் இல்லாமல் பூட்டப்பட்ட நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் அவசர காலங்களில் கழிவறையை பயன்படுத்த முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் இது குறித்து தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு கழிவறையை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.

மேலும் செய்திகள்