முறிந்து விழும் நிலையில் புளியமரம்

Update: 2024-05-05 14:41 GMT

திருவள்ளூர் மாவட்டம், தண்டலம் கிராமம் அம்பேத்கர் தெருவில் பெரிய புளியமரம் ஒன்று உள்ளது. பல வருடங்கள் பழமையான இந்த புளியமரம் தற்போது விழும் தருவாயில் உள்ளது. இந்த மரம் முறிந்து விழுந்தால் இதன் அருகில் இருக்கும் 5-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்து விடும். மேலும் உயிர்ச்சேதம் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய அனுமதியுடன் புளியமரத்தை பாதுகாப்பாக வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்