சின்ன வெங்காய தொழிற்சாலை அமைக்க வேண்டும்

Update: 2024-05-05 12:33 GMT
  • whatsapp icon
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா புது அம்பாளையத்தில் ஏராளமான விவசாயிகள் வசித்து வருகின்றனர். இங்கு பெரும்பாலும் விவசாயிகள் வெங்காயத்தை பயிர் செய்து வருகின்றனர். வெங்காயம் நன்கு விளைந்தவுடன் பறித்து சென்று வெளியிடங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். எனவே விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு ஆலத்தூரில் சின்ன வெங்காயத்தை பயன்படுத்தி மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களான உணவு பொருட்கள் உள்ளிட்டவை தயாரிக்க தொழிற்சாலை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்