புதர் சூழ்ந்த கால்வாய்

Update: 2024-05-05 12:31 GMT

பந்தலூர் தாலுகா சர்வீஸ் ஸ்டேஷன் சாலையோர கால்வாய் புதர்கள் நிறைந்து காட்சி அளிக்கிறது. இதனால் மழைகாலங்களின்போது அங்குள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்து சேதத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. மேலும் கால்வாயில் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து வருவதால், தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அந்த கழிவுநீர் கால்வாயை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்