சுகாதார சீர்கேடு

Update: 2024-05-05 10:05 GMT

பொன்மனை பேரூராட்சிக்குட்பட்ட மங்கலம் செக்குமூடு பகுதியில் கோதையார் இடதுகரை கால்வாய் பாய்கிறது. இந்த கால்வாயில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தூர்வாரும் பணி நடந்தது. கால்வாயில் தூர்வாரிய கழிவுகளை அருகில் உள்ள சாலையோரத்தில் கொட்டியுள்ளனர். இதனால், அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசி வருவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சாலையோரத்தில் காணப்படும் கழிவுகளை அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்