பூட்டியே கிடக்கும் சமுதாயகூடம்

Update: 2024-04-28 17:54 GMT

தாரமங்கலம் பேரூராட்சியாக இருந்தபோது பழைய 5-வது வார்டு எம்.ஜி.ஆர். நெசவாளர் காலனி குடியிருப்பு பகுதிக்கு அருகில் சமுதாயகூட கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் தற்போது பல ஆண்டுகள் ஆகியும் இந்த சமுதாய கூடம் பயன்பாட்டில் இல்லாமல் பூட்டியே கிடக்கிறது. ஏழை, எளிய மக்கள் குறைவான கட்டணத்தில் விசேஷங்கள் நடத்த கட்டப்பட்ட இந்த கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

-கருப்பசாமி, சேலம்.

மேலும் செய்திகள்