துணை மின்நிலையம் அமைக்கப்படுமா?

Update: 2024-04-28 12:56 GMT
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், வம்பனில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் வம்பன் பகுதியில் துணை மின்நிலையம் அமைக்க வேண்டும் அப்பகுதி பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. மேலும் அடிக்கடி மின்தடையும் ஏற்பட்டு வருகிறது. எனவே உடனடியாக வம்பன் பகுதியில் துணை மின்நிலையம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எ ன கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்