சாலையில் சிதறி கிடக்கும் கற்கள்

Update: 2024-04-28 12:28 GMT
பெரம்பலூர் - அரியலூர் சாலையில் தினமும் பல நூற்றுக்கணக்கானோர் வாகனங்களில் சென்று வருகின்றனர். இந்தநிலையில் இந்தச் சாலையில் செல்லும் கனரக வாகனங்களில் இருந்து விழும் சிறுகற்கள் ஆங்காங்கே சிதற கிடக்கிறது. இதனால் மோட்டார் சைக்கிளில் செல்வோர் சில நேரங்களில் தவறி விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் பதாசாரிகளும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள்,சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்