படித்துறை சீரமைக்கப்படுமா?

Update: 2024-04-28 10:57 GMT

தஞ்சை மாவட்டம் தொண்டராயன்பாடி கிராமத்தில் ஆனந்த காவேரி ஆற்றில் படித்துறை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த படித்துறை முறையான பராமரிப்பின்றி தற்போது உடைந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் படித்துறையை பயன்படுத்த முடியாத நிலை உருவாகி உள்ளது. தற்போது வெயில் காலம் என்பதால் ஆற்றில் நீர் இல்லாத சூழல் நிலவுகிறது. இதனை பயன்படுத்திக்கொண்டும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆனந்த காவேரி ஆற்றின் படித்துறையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.


மேலும் செய்திகள்