கோவில் நிலம் பராமரிக்கப்படுமா?

Update: 2024-04-28 10:30 GMT

கோவில் நிலம் பராமரிக்கப்படுமா?

பல்லடம் நாரணாபுரம் அங்காளம்மன் கோவிலுக்கு சொந்தமான, சுமார் ரூ.40 கோடி மதிப்பிலான 8.95 ஏக்கர் புஞ்சை நிலம் பல்லடம் - திருப்பூர் மெயின் ரோட்டில் உள்ளது. இந்த நிலத்தை கடந்த 30 ஆண்டுகளாக அந்த பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து வைத்திருந்தனர். இந்தநிலையில் கடந்த 1 வருடத்திற்கு முன் அந்த புஞ்சை நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர். பின்னர் அங்கு அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் என்று போர்டு வைக்கப்பட்டது. மீட்கப்பட்ட கோவில் நிலத்தை முறையாக பராமரிக்க அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


குமரன், நாரணாபுரம்.

9876575431

மேலும் செய்திகள்