சேவை மையம் செயல்படுமா?

Update: 2024-04-21 11:16 GMT
கரூர் மாவட்டம் புன்னம் ஊராட்சி சார்பில் ரூ.13 லட்சம் செலவில் சேவை மையம் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. பின்னர் அந்த கட்டிடம் செயல் படாமல் அப்படியே கிடக்கிறது. இதனால் புன்னம் ஊராட்சி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சான்றிதழ்களை சேவை மையத்தில் பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர்கள் புன்னம் சத்திரம் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சேவை மைய கட்டிடத்தை திறக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்