பழுதடையும் வாகனங்கள்

Update: 2024-04-14 15:27 GMT

பெரம்பலூர் தலைமை மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் வரும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு இப்பகுதியில் மேற்கூரைகள் அமைக்கப்படாமல் உள்ளதால் வாகனங்கள் வெயில் மற்றும் மழையில் நின்று பழுதடைந்து வருகிறது. இதனால் நோயாளிகள் மற்றும் நோயாளிகளை பார்க்க வருபவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். 

மேலும் செய்திகள்