தூர்வாரப்படாத இரட்டைக்குளம் ஏரி

Update: 2024-04-14 15:15 GMT

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் கீழநத்தம் பகுதியில் உள்ள இரட்டைக்குளம் ஏரியை நம்பி அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சுமார் நூற்றுக்கும் அதிகமான ஏக்கர் நிலங்களில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த ஏரி பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளதால் மழை பெய்யும்போது மழை நீரை இந்த ஏரியில் முழுமையாக சேகரித்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் கோடைகாலத்தில் இந்த ஏரியை தூர்வாரி மழைக்காலங்களில் மழைநீர் சேகரித்து இப்பகுதியில் நிலத்தடி நீரை உயர்த்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்