சுகாதார சீர்கேடு

Update: 2024-04-14 09:52 GMT

தஞ்சை மாநகராட்சி சுந்தரம் நகர் 10-தெருவில் பாதாள சாக்கடை குழியில் இருந்து கழிவு நீர் வெளியேறி செல்கிறது. இந்த கழிவு நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடி சாலையோரத்தில் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது தேங்கி கிடக்கும் கழிவு நீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் சாலையில் நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் பாதாள சாக்கடை கழிவுநீர் குழாயிலிருந்து கழிவு நீர் வெளியேறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்