நடைபாதையில் பள்ளம்

Update: 2024-04-14 09:52 GMT

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் அறந்தாங்கி முக்கம் காந்தி சிலை அருகே நடைபாதை உள்ளது. இந்த நடைபாதையில் கான்கிரீட் உடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. நடைபாதையில் பள்ளம் இருப்பதால் அந்த வழியாக பொதுமக்கள் சிரமத்துடன் நடந்து செல்கின்றனர். இரவு நேரங்களில் அந்த வழியாக செல்பவர்கள் பள்ளத்துக்குள் விழுந்து விடும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள நடைபாதை பள்ளத்தை சீரமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்