தூர்வாரப்படாத கோவில் குளம்

Update: 2024-04-07 15:57 GMT

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் சிவன் கோவிலுக்கு சொந்தமான திருக்குளம் கோவிலின் அருகே அமைக்கப்பட்டுள்ளது. இந்த குளமானது தூர்வாரப்படாமல் தூர்ந்துபோன நிலையில் காணப்படுவதினால், மழை பெய்யும்போது இந்த குளத்தில் மழை நீரை சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் வெயில் காலங்களில் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் கிடைக்காமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்