டாஸ்மாக் கடையால் பொதுமக்கள் அவதி

Update: 2024-04-07 15:47 GMT

அரியலூர்-கல்லங்குறிச்சி சாலையில், சாஸ்திரி நகர் பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. சாலையோரத்தில் உள்ள இந்த டாஸ்மாக் கடையில் மதுப்பிரியர்கள் கூட்டம் எப்போதும் உள்ளது. இந்நிலையில், இந்த கடைக்கு மதுபானம் வாங்க வருகின்ற பலரும் சாலையோரத்தில் அமர்ந்து மது அருந்தி வருகின்றனர். இதனால் குழந்தைகள் மற்றும் பெண்கள் இந்த வழியாக நடந்து செல்வதற்கு அச்சப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்