ஆபத்தான ஆழ்குழாய் கிணறு

Update: 2024-04-07 15:35 GMT

தாளவாடி திகனாரை அருகே உள்ள மல்குத்திபுரம் தொட்டி கிராம மக்களின் குடிநீர் தேவைக்காக திம்மையன் குட்டை அருகே சாலை ஓரத்தில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டது. ஆனால் இதில் போதிய அளவு தண்ணீர் வராததால் கடந்த ஒரு ஆண்டாக திறந்த நிலையில் காணப்படுகிறது. இதில் பள்ளி மாணவ-மாணவிகள், குழந்தைகள் தவறி விழுந்து அசம்பாவித சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது. எனவே ஆபத்தான நிலையில் உள்ள ஆழ்குழாய் கிணற்றை மூடி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்