ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2024-04-07 14:43 GMT

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், மீன்சுருட்டியின் மையப்பகுதியில் ஏரி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏரியில் தற்போது சாக்கடைநீர் கலப்பதினால் பொதுமக்கள் இந்த ஏரி நீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் ஏரியை சுற்றி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதால், ஏரியின் அளவு குறைந்து வருகிறது. இதனால் மழை பெய்யும்போது மழைநீரை முழுமையாக இந்த ஏரியில் சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்